Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம்: காளிப்பட்டி, கந்தசாமி கோவிலில், தேய்பிறை கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
சேலம், நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு, மூலவருக்கு தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிசேகங்கள் நடந்தது.
கோவில் உட்பிரகாரத்தில் வண்ணமலர்கள் மற்றும் பல்வேறு கனிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் வள்ளி, தெய்வாணையருடன் அருள்பாலித்தார். சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில் பெண்கள் பொங்கல் வைத்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டனர். மாலை 6 மணிக்கு உற்சவர் நான்குரத வீதிகளின் வழியாக, வீதிஉலா நடந்தது.